Monday, July 28, 2025
Friday, July 25, 2025
Thursday, July 24, 2025
Sunday, July 20, 2025
Amma !!!!!!!!!!!!!
சுகப்பிரசவம் எப்படின்னு கேள்விப்பட்டிருப்பீர்கள். 🤰
எழுத்தால் படித்து பார்த்து கண் கலங்கியதுண்டா?
இதைபடியுங்கள்!!! 🤱
மனது கலங்கும்..!!😥
முதலில் வலபக்க இடுப்பில் சுரீரென்ற குத்தல், பின்னர் இடைவெளி விட்டு மீண்டும், இடைவெளி விட்டு மீண்டும், இப்படியே தொடர்ந்து நடு வயிறு வலி ஆரம்பிக்கும் போது குழந்தை, தான் பிறக்கப் போகும் நேரத்தை முடிவு செய்துவிட்டது என்று அர்த்தம்...
புதிய உலகை காண வேண்டும் என்று குழந்தைகள் முடிவு செய்த பின், அதற்கு முதலில் இது வரை வாழ்ந்து வரும் கருவறை உலகில் தனக்கான வாழ்வாதரத்தை அழிக்கும் பனிக்குடத்தை அது உடைக்கும். அங்குதான் குழந்தை சுவாசிக்கும், நீந்திகொண்டிருக்கும்.
அதை உடைத்த பின் புதிய வாழ்வாதாரத்திற்கான வழி நோக்கி முன்னெடுக்கும் போது பிரசவ வலி உச்சத்தில் இருக்கும். (முழு பனிக்குட நீரும் வெளியேறும் முன் மருத்துவமனை சென்றுவிட வேண்டும்) மொத்த வயிறும் வலிக்கும், சீராக சுவாசிக்க முடியாது. அதிக பதட்டம், இந்த நேரத்தில் பெண் வேண்டுவதல்லாம் கணவனின் கரத்தை இறுகப் பற்றுதல் தான். அந்த நேரத்தில் வேறு யாரையும் தேடாது புருஷன் புருசன் புருசன் மட்டும்தான்.
முதலில் இனிமா கொடுத்து வயிற்றை சுத்தம் செய்வார்கள். ஏற்கனவே வயிறு வலி, இதுல இது வேற. இப்ப கால் இரண்டையும் விரித்து வைத்துக் கொள்ளச் செய்வார்கள். அப்போது வலி முதுகுத்தண்டை தாக்க ஆரம்பித்திருக்கும். எப்படி என்றால் கத்தியை எடுத்து முதுகுதண்டின் டிஸ்க்களுக்கு இடையில் சொருகினாள் எப்படி இருக்குமோ அப்படியான வலி. ஒரு நர்ஸ் நெஞ்சு மேல் ஏறி வயித்த பார்க்க உக்காந்து தன்னோட இரண்டு கால் முட்டுகளால் மேல்வயிற்றின் இரண்டு பக்கங்களில் இருந்தும் அழுத்தம் கொடுக்கும். கைகளால் மேல் வயிற்றை கீழாக தள்ளும்.
டாக்டர் முக்கு முக்குன்னு சொல்வார்கள், சீசேரியனில் மட்டும்தான் மயக்க மருந்து கொடுத்து பிரசவம் நடக்கும். அது சீசேரியன் கத்திய வச்சி அறுப்பாங்க அப்பறம் தையல் எல்லாம் போட வேண்டுமே அதனால் என்கின்றீர்களா? நிற்க சுகபிரசவத்திலும் தையல் போட வேண்டும் அது வயிற்றில் கிடையாது பிறப்புறுப்பு ஒரு குறிப்பிட்ட அளவிற்க்கு மேல் விரிவடையாத சூழல் இருக்கும் போது. கத்தரிப்பான் போன்ற தோற்றத்தில் தேங்காய் உரிக்கும் உபகரணம் பார்த்து இருக்கிறீர்களா? தேங்காயில் அதன் கூர்மையான முனை கொண்டு ஒரு குத்து குத்தி இரண்டாக பிளக்க வேண்டும். அதே மாதிரி ஒரு உபகரணம் கொண்டு பிறப்புறப்பில் செலுத்தி அதன் கைப்பிடியை விரித்து ஒரு திருக்கு.
அங்கயே கண்ணுரென்டும் சொருகிடும் செத்தே போய்டுவோம்னு தான் தோணும். ஆனா குழந்தையாட தலை வெளில தெரிது Push push push ன்னு சொல்ல, “டாக்டர் முடியல டாக்டர்” என்பாள். ஏம்மா உனக்கு வலிக்கிர மாதிரி தான் உன் குழந்தைக்கும் வழிக்கும் அதோட வலியை குறைக்கனும்னா நீ சீக்கிரம் முக்கி பிள்ளைய பெத்துக்கனும் அப்பறம் உன் இஷ்டம் னு சொல்லுவாங்க அப்போ வரும் ஒரு வெறி பாருங்க, நரம்புகள் முருக்கி உடம்பின் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி ஓரிடத்தில் குவித்து முப்பது நொடி அளவில் நீண்ட முக்குதல் முக்கி பிறப்புறுப்பை கிழித்துக்கொண்டு குழந்தை வந்து விழும்.
என்ன குழந்தை என்று சொல்லிய பின் குழந்தையை குளிப்பாட்ட கொண்டு போயிடுவாங்க. ஹப்படா என்று நிம்மதியில் கொஞ்சம் ஆசுவாசம் அடையும் போது கிழிந்த பிறப்புறப்பை டாக்டர் தைக்க ஆரம்பித்து இருப்பார். எது வரை உறுப்பு கிழிந்து இருக்கும் தெரியுமா? மலத்துவாரத்தின் மேற்பகுதி வரை. இந்த டாக்டர் அப்பயும் மயக்க ஊசி போடமாட்டார். அதெல்லாம் கொடுமையிலும் கொடுமை. அப்பறம் பெட் எல்லாம் மாத்தி புதுசா வார்ட் ரூம்ல கூட்டிட்டு போயி விட்ருவாங்க. Actually தூக்கிட்டு போயி குழந்தைக்கு பால் கொடுக்கனும்..
அந்த பச்சை குழந்தைக்கு கண்ணும் முழிச்சு இருக்காது பாலும் எப்படி உறுஞ்சி குடிக்கனும்னும் தெரியாது ஆனா பசில அழும் பார்க்கவே பாவமா இருக்கும். பாலை கொஞ்சம் பீச்சி அதோட வாய்ல விட்டுட்டு காதை தடவி கொடுத்தா உரிஞ்சி குடிக்க ஆரம்பிச்சிடும். இன்று வரைக்கும் தீராத ஆச்சரியமாக இருக்கிறது அது எப்படி காதை தடவினா உரிஞ்சு குடிக்க தோனுதுன்னு? எது எப்படியோ என்னிலுருந்து பிறந்த என்னுயிர் இன்னொருநான் எனக்கான பசியை என்னிடமே தீர்த்துக் கொள்வது போல இருக்கும் அந்தக் குழந்தையின் பால் குடித்தல். அது வரை உடல் அனுபவித்த கஷ்டங்களுக்கு மனதின் பாரம் குறையும்.
படிக்கும் போதே மனது கண்ணீரில் நனைகிறதா? அப்படியானால் இதை தாங்கும் பெண்...?🤰🤱
உண்மையில் தலையில் தூக்கி வைத்து கொண்டாடபட வேண்டிய ஓர் ஜீவன் என்றால் அது தாய்தான். 🤱அவளை கடைசி வரை ஒரு குழந்தையாக பார்த்து கொள்வது ஒவ்வொருவர் கடமை... 🥺🥺
Thursday, July 17, 2025
Temples of wonder !!!
Was the Tabla Really Invented by Amir Khusrau?
Wednesday, July 16, 2025
Earth’s Black Box !!!
6000 years and on .......
உலகில்_ஆறாயிரம்_ஆண்டுகளாக #தொடர்ந்து #இயங்கிவரும் #ஒரே #ஒரு #மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?
உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும்
ஒரு நகரம் உருவாக்கப்பட்டது.
ஆனால் சுமார்6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் “மதுரை “தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள்.
நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை
*”The World’s only living civilization”*
என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின்
“The Story of India” ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ்.
மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது.
இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம்.
அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூஜித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும் இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர்.
ஆம் நண்பர்களே சுமார் 6000வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக உள்ளதல்லவா?
அது மட்டுமல்ல மதுரைக்கு *”தூங்கா நகரம்”* என்ற பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று கூறுவதுண்டு. இதன் காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது.
*ஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும் மொழியையும் சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம் மதுரை மட்டும் தான்* என்பது பெருமைபடக்கூடிய விடயம் தானே!..
Tuesday, July 8, 2025
Sunday, July 6, 2025
Vijayagopal - Flute - Concert No 02
Akshara Samskruthi - Concert No 01
Saturday, July 5, 2025
Wednesday, July 2, 2025
அவன் தான் கடவுள்
கவியரசன் கண்ணதாசன் சொன்னது.
🪷ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பான்.
🪷மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பான்.
*அவன் தான் கடவுள்*🙏🏽
🪷பூலோகத்தில் வாழும்போது புகழையும் கொடுப்பான்.
🪷பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பான்.
*அவன் தான் கடவுள்*🙏🏽
🪷பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பான்.
🪷அங்கே தேனை வைத்ததை தேனீக்கும் சொல்வான்.
🪷பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வான்.
*அவன் தான் கடவுள்*🙏🏽
🪷கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கும் வைப்பான்.
🪷அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பான்.
*அவன் தான் கடவுள்*🙏🏽
🪷ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை (மானுக்குக்) கொடுப்பான்.
🪷பின்னர் அந்த மானை பிடிக்கின்ற சக்தியை 🐅 புலிக்கும் கொடுப்பான்.
*அவன்தான் கடவுள்🙏🏽*
🪷அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவையும் கொடுப்பான்.
🪷அதை முழுதும் பயன்படுத்தாத மனிதர்களையும் படைப்பான்.
*அவன் தான் கடவுள்*🙏🏽
🪷தவம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பான்.
🪷அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பான்.
*அவன்தான் கடவுள்🙏🏽*
🪷நாட்டை ஆள விட்டு அழகும் பார்ப்பான்.
🪷அவனே கொள்ளையடித்தால் கொடுத்தவனே பிடுங்கவும் செய்வான்.
*அவன் தான் கடவுள்🙏🏽*
🪷புரியாதவனுக்கு புதிராய் இருப்பான்.
🪷தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பான்.
*அவன் தான் கடவுள்🙏🏽*
🪷கடல் முழுதும் தண்ணீரை வைப்பான்.
🪷தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பான்.
*அவன் தான் கடவுள்🙏🏽*
🪷மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும்.
🪷சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான்.
🪷பின்னிருந்து இயக்குவான்.
*அவன் தான் கடவுள்🙏🏽*
🪷தன்னை வெளியே தேடினால் விளையாட்டுக் காட்டுவான்.
🪷(உள்ளத்தின்) உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான்.
*அவன் தான் கடவுள்🙏🏽*