The intention of this blog is only to share the collections. Inadvertently if any file is under copyright, please intimate me so that it can be removed forthwith.
Friday, August 6, 2021
Sunday, August 1, 2021
Samayal Paadame - Manippoor Maamiyaar
After hearing this song, and the next song, Read the article "A Beautiful Music Analysis"
A beautiful music analysis
இளையராஜாவும் ஸ்வராக்ஷரமும் திரையிசைப் பாடல்கள், அந்த படத்தில், பாடலின் சந்தர்ப்பம் வரும் போது, அச்சந்தர்ப்பத்தின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் இல்லையெனில் கதையை முன்னே நகர்த்தி செல்ல இயலாது. இளையராஜாவை பொறுத்தவரை, நடிகர்கள் தம் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளை விட பன்மடங்கு அதிகமாய் மக்களின் மனதை தொடும் வகையில் இசை-கூற்றுகளை அமைத்து இயக்குனர்களின் வேலையை மிக சுலபமாக்கி கொடுக்கக்கூடியவர். இந்த பாடலும் அப்படித்தான். ஆனால் இந்த பாடல் இப்படத்தில் வரும் முன்பு 1979-ல் வெளிவராத மணிப்பூர் மாமியார் என்ற படத்தில் ஏற்கனவே இடம் பெற்ற பாடல் தாம். அதே பாடலானாலும், வார்த்தைகளை சற்றே மாற்றி, சந்தர்பத்திற்கேற்றார் போல் அமைத்திருக்கிறார். அது மட்டுமல்ல. இரண்டு பாடல்களிலும் இடை-இசை முற்றிலும் மாறு பட்டிருக்கும். இரண்டு பாடலுக்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டையும் கேட்கவும். என்ன சமையலோ... என்ற பாடல், உன்னால் முடியும் தம்பி திரைப்படத்திலிருந்து. இந்த பாடலை பார்ப்பதை விட கேட்டால் ருசிக்கும். இந்த பாடல் திரை ஆக்கத்தாலோ, நடிப்பின் சிறப்பாலோ பெயர் போனதல்ல, இசை அமைப்பினால் மட்டுமே பெயர் போனது. இந்த பாடல் ஒரு ராகமாலிகை, அதாவது, 4 இராகங்களால் இசையை பெற்ற பாடல். இது ஒன்றும் புதிதல்ல, ஆனால், சாஹித்தியமும், இசையும் இணைந்து பின் ஸ்வராக்ஷரங்களுக்கு இடம் கொடுக்கும் போது அதன் சுவையே அலாதி. மோஹனம், கல்யாணி, வசந்தா மற்றும் மத்தியமாவதி ஆகிய நான்கு இராகங்களை கொண்டு இசைக்கப்பெற்ற பாடலே, "என்ன சமையலோ..." பழைய பாடலில் (1979 version), பெண்கள் தாம் சமைக்க வேண்டும், ஆணாகிய நான் அதிகம் சமைத்துவிட்டேன், சமையலை கற்றுக்கொள்ளவும் என்கிற தொனியில் பாடல் இருக்கும். அதை புதிய பாணியில் மாற்றியிருப்பர் பாடலாசிரியர் - அதுவும் இளையராஜா தான். "சமையல் பாடமே பொறுமையாக படிக்க வேண்டும்..." என்று பாடிய பின் ஜலதரங்கம் வரும், அதை தொடர்ந்து, பக்கவாஜ் மற்றும் வயலின் களை தட்டும் வேளையில் வீணையும் சேர்ந்து ஒரு அசத்தலான அவியல் சுவைக்க கிடைக்கும். - இது பழைய பாடல். ஆனால், புது வடிவோ.."என்ன சமையலோ.. என்ற பல்லவி முடிந்ததும், புல்லாங்குழல் மற்றும் சித்தாருடன் மிருதங்கம் அசத்தலாய் இருக்கும். அனுபல்லவியில் "ஆஸ்டல் சோறு", "அண்ணி சமையல்" ஆகா மாறியிருக்கும். சந்தரப்பத்திற்கேற்ப வரிகளில் மாற்றம் உண்டு. இரண்டுமே இரசிக்கும் படியாக இருக்கும். இடை-இசை: பழைய பாடலில் விசிலில் ஆரம்பிக்கும் இடை-இசை. பின்னர்,வயலின், ஜலதரங்கம், வீணை, புல்லாங்குழல் என ஒரு சின்ன சபை கூட்டமே நடக்கும். அழகு என்னவென்றே., மோஹனத்திலிருந்து கல்யாணிக்கு மாறும் transition is just seamless - தடமே தெரியாது மாறும் அழகு ராஜாவின் கைவண்ணம். பாத்திரங்கள் விழும் சத்தத்துடன் துவங்குகிறது இடை இசை. தங்கை அடுப்பை ஊதுகிறாள் - கிளாரினெட் மற்றும் synthesizer கொண்டு அந்த ஒலியை எழுப்புகிறார் ராஜா, அதுவும் க, த, ப, க, ரி, ச, ரி, க... என்று மோஹனத்திலே ஊதுகிறார். தாளத்தை பூர்த்தி செய்ய இருமல் சத்தம். இந்த காட்சி அமைப்பு வடித்தபின் இசை அமைக்கவில்லை. ஆகவே, இந்த காட்சிகளை இசை அமைப்பாளர் தானே visualise செய்திருக்க வேண்டும், அதை இயக்குனரிடம் சொல்லியிருக்க வேண்டும். அவர் எழுதும் இசை சுற்றுப்புற சூழல்களுடன் பயணம் செய்ய வேண்டும். பின்னர் சேரும் நாதஸ்வரம் அற்புதம். இந்த பாடலில் ஒரு ராகத்திலிருந்து மற்றோர் யாகத்திற்கு செல்ல நாதஸ்வரத்தை பயன்பதுத்தியிருப்பர் இசையமைப்பாளர். சரணங்களில் வார்த்தைகள் மாற்றம் உண்டு. பெரும் அளவில் இசை கருவிகளின் மாற்றம் ஏதும் இல்லை. “கல்யாணி… கல்… ஆணி…” ஒவ்வொன்றும் தனித்தனி சொற்களாக இருப்பது (எஸ்.பி.பியின் ஷ்ஹ்… ஆணி ... கவனிக்கத்தக்கது. ஷஹ் தாலத்தில் நிரப்புகிறது மற்றும் கலவையின் ஒரு பகுதியாகும் ). ஆனால் பின்வருபவை நம் சுவாசத்தைத் தட்டுகின்றன, ஏனென்றால் அவர் ஸ்வரக்ஷரம் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர்களுக்கு கூட கடினமாக இருக்கும் ஒன்றைக் கொண்டுவருகிறார், அதாவது ஸ்வரம் மற்றும் அக்ஷரம், பாடல் வரிகள் ஒரே மாதிரியாக இருக்கும். “கரி காரி கறி காய்களும் எங்கே , கறிவேப்பிலை எங்கே” மற்றும் “மா மா மா மா மஞ்சள் பொடியும் எங்கே மசாலா பொடி எங்கே....” அவர் ஸ்வரக்ஷரத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். மா என்பது ஸ்வரம் மற்றும் மஞ்சள் மற்றும் மசாலாவுடன் வருகிறது (எங்கே அந்த வார்த்தைகளில் மாவும் ஸ்வரம்). இது “தா நி தா நி நி தா தனியா இருக்கா?” மற்றும் “நி நி நி… பொறு நீ … கவனி” க்குச் செல்லுங்கள், அங்கு தா மற்றும் நி ஸ்வரங்கள். ஸ்வரக்ஷரம் கர்நாடக இசையின் இன்னொரு பரிமாணம். "ஸ்வரக்ஷரம்" என்ற வார்த்தையை உன்னிப்பாக கவனித்தால், அது ஸ்வரம் மற்றும் அக்ஷரம் என்ற 2 சொற்களின் கலவையாகும். ஸ்வரம் (குறிப்பு) மற்றும் அக்ஷரம் (பாடல் வரிகளில் உள்ள எழுத்து) ஒன்றாக மாறும்போது ஒரு ஸ்வராக்ஷரம் நிகழ்கிறது. சப்தாஸ்வரங்கள் ச, ரி, க, மா, பா, த, நி என்பது எந்த ராகத்துக்கும் அடிப்படை குறிப்புகள் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம். அக்ஷரம் என்பது ஒரு கலவையின் பொருள் வார்த்தைகள் தவிர வேறில்லை. ஸ்வரங்கள் உதவியுடன் இசையமைப்பாளர் அக்ஷரம் நாணயமாக்க முடிந்தால், அது ஸ்வரக்ஷரம் தவிர வேறில்லை. இது ஒரு மகிழ்ச்சியான வார்த்தைகளின் வித்தை. இடை-இசை: பழைய பாடலில் குழலிலிருந்து தொடங்கும் வசந்தா இராகம். அதனோடு சேரும் வீணையும் வயலினும் பின்னர் எல்லாம் சேர்ந்து இசைப்பது ஒரு இன்ப மயமான அனுபவம். புது பாடலில் நாதஸ்வரத்தில் வசந்த துவங்கும், பின்னர் அதை மெலிதாய் சந்தூரும் சிதாரும் பின் தொடரும், இவையோடு குழலும் சேரும் அழகு அலாதி. அதை இரசித்து முடிப்பதற்குள், "ஐயோ அப்பா வந்துட்டாங்க.." என்று மொத்தமாய் நிறுத்துவது....? மௌனமும் ராஜாவின் இசையில் அழகு தான். இறுதியாக அவர் நாக்-அவுட் பஞ்சை வழங்குகிறார். நதஸ்வரம் மீண்டும் கல்யாணியை அடுத்த ராகம் வசந்தாவின் மீது அழைத்துச் செல்கிறார், மேலும் வரிகள் “சா தா மா கா தா மா தா” அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “சாதம் ஆக தமதமா?” ஒரு கலசத்தில் ஸ்வரக்ஷரம். மேதை! இது “கா மா கா மா கா மா கா கா மா மா வாசம் வருதே” (கா மற்றும் மா) மற்றும் “சா ரி சா ரி சா சா ரி ரி சாரி விலையாட்டுகள் போதும்” (சா மற்றும் ரி உடன்) உடன் தொடர்கிறது. நாதஸ்வரம் (இந்த பாடலில் ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு பாலமாக விளங்குகிறது) பழைய பாடலில் வீணை நம்மை மத்தியமாவதிக்கு அழைத்து செல்ல இடை-இசை உண்டு. புது பாடலில் அது இல்லை. இந்த பாடல் எந்தவொரு கிளாசிக்கல் இசையமைப்பையும்சவாலுக்கு அழைக்கும் வண்ணம் அமைந்துள்ளது (பாடல் மற்றும் இசை, ஏனெனில் இது 4 ராகங்களுடன் கூடிய சரியான ராகமலிகா, இது மிகவும் பாராட்டத்தக்க அமைப்பாக அமைகிறது) மற்றும் இன்னும் சாதாரண மனிதர்களுக்கு புரியும் வகையில் அமைந்துள்ள பாடல் வரிகள் (சுவையாக) இருக்கிறது. உண்மையில், ஒவ்வொரு ராகத்திலும் உள்ள ஸ்வராக்கள் பாடல் வரிகளுக்கு உதவ முன்வருகின்றன, அந்த குறிப்பிட்ட ராகத்தை பாடும் போது (சம்பந்தப்பட்ட நுணுக்கத்தை கற்பனை செய்து பாருங்கள்) உண்மையான ராகத்தையும் சமரசம் செய்யாமல் அரிசியின் சுற்றியுள்ள காட்சி சத்தத்தையும் பாடகர்களின் இருமல் மற்றும் கரிமமாக பறக்கவிடாமல் சமரசம் செய்யாமல் இந்த பாடலின் ஒரு பகுதியை உருவாக்குவது இது ஒரு கட்டாய மாஸ்டர் கிளாஸாக உத்தரவாதம் அளிக்கிறது. https://www.youtube.com/watch?v=LPUrWd6NCSY: Old song https://www.youtube.com/watch?v=nAXlCw5GnNg : New version
Courtesy: Facebook
Narasimhan Gopalakrishnan
Wednesday, July 28, 2021
Sunday, July 25, 2021
Friday, July 23, 2021
Friday, July 16, 2021
Sri Sita Ramula Kalyanam | Rochester Raga Jam
This evergreen Telugu piece from the 1961 film Sita Rama Kalyanam was originally orchestrated by Gali Penchala Narasimha Rao, written by Samudrala Raghavacharya, and sung by P. Susheela. It has been a mainstay of Telugu marriage ceremonies and festivals for over half a century and celebrates the majestic union of Rama and Sita, taking the audience through each aspect of their iconic wedding ceremony.
The cover of this song is rendered by Sai Mallika Sahitala (vocal), Sri Visalakshi Nutulapati (vocal, keyboard), Aditya Srivatsav Tangirala (viola), and Pranav Bhagavatula (mridangam, ghatam). Mentoring and music production by Mahesh Raghvan.
Saturday, July 10, 2021
Thursday, July 8, 2021
Subscribe to:
Posts (Atom)